Sunday, February 13, 2011

இது வரை இல்லாத உணர்விது

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ


இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ


மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடிக் கிடைத்தது இங்கே


மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடிக் கிடைத்தது இங்கே


இங்கே ஒரு எண்ணம் வந்து நிறைய
எப்போது ஏன் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும்
நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ..


அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்


இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் இந்த நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே மொட்டான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே


மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே மொட்டான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே


தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே


தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

No comments:

Post a Comment